Sunday, March 6, 2011

சீடன்


கடவுளை வைத்து படம் எடுத்தால் மக்களிடம் போய் சேராது என்று இணங்க ஒரு வித்தியாசமான முறையில் எடுத்துளார் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா அப்படமே
சீடன் . நல்லவோரு கதைகளம் மற்றும் நடிப்பு இதுவே சீடனின் சொல்லக்கூடிய பெருமை.

அன்னன்யாவின் அப்பற்ற நடிப்பு பிரமாதம் . கிருஸ்ணா தனது பங்கை நன்றாக செய்துள்ளார் . அனன்யா தனது காதல் பற்றி தன் பிடித்த கடவுளான எம் பெருமான் முருகனிடம் சொல்வதும் தனது கவலைகளை முறையுடுவதும் வெகுளித்தனமாக இருந்தாலும் பார்பதற்கு குளிர்ச்சியாக இருந்தது.

தனுஷ் ரூபத்தில் சமையல்காரராக அந்த வீட்டுக்கு வருகிறார் முருகன் என்றும் சொல்லலாம் இல்லாவிடில் முருகனால் அனுப்பப்பட்ட சீடன் என்று கூறலாம் .. பிறகு காதல் ஜோடியை எப்படி சேத்து வைக்கிறார் என்பதுதான் படம்


அனன்யா கிருஸ்னாவின் காதல் கைசேருமா என்று புலம்பும் நேரத்தில் தனுஸ் தன் சொற்கலாலும் தன் செயல்களாலும் அனன்யாவுக்கு புரிய வைக்கிறார் . தனுஸ் மயிலிறகை வைத்து பண்ணும் அற்புதத்தை பாரட்டலாம் . அதை பார்க்கும் பொது உன்மையில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்க்கு நம்பிக்கை ஊட்டுகிறது இப் படம் . 


போலிச்சாமியாராக நடித்திருக்கும் விவேக்கின் நகைச்சுவை சரவெடியாக அமைந்திருக்கிறது.சுஹாசினி, ஷீலா தம் பங்கை காட்டியுள்ளனர் . இசையமைப்பாளர் தீனா,பாடல்களிலும், பின்னணி இசையில் மோலோடிகளை வாரி இறைத்திருக்கும் தீனா, முருகன் பாடலின் மூலம் தாளம் போடவும் வைத்திருக்கிறார்.